முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்ச்சைக்குரிய திரைப்படமான "எ கேரளா ஸ்டோரி" க்கு மக்களிடையே எதிர்ப்புகள் வலுக்கிறது..

சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம், கேரளா ஸ்டோரி, இந்தப் படம் இப்பொழுது சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளின் மையமாக மாறியுள்ளது, பலர் அதன் வெளியீட்டை நிறுத்தக் கோருகின்றனர்.   இந்தியாவின் தென்திசை மாநிலமான கேரளாவில் சுமார் 32,000 பெண்கள் காணாமல் போனதற்குப் பின்னால் உள்ள சம்பவங்களை வெளிக்கொண்டு வந்ததாக இப்படத்தின் கதை சொல்வதாகவும், இசுலாமிய மதத்திற்கு மாறி ISIS இல் சேரும் நான்கு பெண்களின் கதையை இப்படம் சித்தரிப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்தப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பயங்கரவாதப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று இப்படம் கூறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.  திரைப்படத்திற்கு எதிராக மாணவர்கள், எதிர்கட்சிகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தலைமையில் கடுமையாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, திரைப்பட தயாரிப்பாளர்கள், இந்திய சமூகத்தை இரு முனைகளாக துருவப்படுத்த முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர...

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்..

சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறினார்.. சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. எந்த கடவுளுமே தன் கோவிலுக்கு இன்னார் எல்லாம் வரக்கூடாது, இன்னார்தான் வரவேண்டும் என சொல்லவில்லை. இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்ட சில சட்டங்கள்தான். எந்த கடவுள் சொல்லியிருக்கார்? யாராவது? ஒரு கடவுளாவது அப்படி சொல்லியிருக்கிறாரா?. நான் சபரிமலை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகவே எந்த கடவுளின் கோயிலிலும் இப்படி செய்யக்கூடாது, இதை செய்யவேண்டும், இதை உணவை சாப்பிடக்கூடாது, தீட்டு உள்ளிட்ட பல விஷயங்களும் நாமாகவே உருவாக்கினதுதான். என்னைப் பொருத்தவரை, கடவுளுக்கும், இதற்கும் சம்மந்தமே இல்லை என்றுதான் சொல்லுவேன்.   க/பெ ரணசிங்கம் என ஒரு படம் பண்ணியிருப்பேன். அதில், எனக்கு தங்கை கேரக்டர். அதில் பீரியட் நேரத்தில் சமைக்காமல் வீட்டில் இருக்கும்போது ந...

பிரபல நடிகை ராக்கி சாவந்த் கைதானார்..

நடிகை ஷெர்லின் சோப்ராவின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நடிகை ராக்கி சாவந்த் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக நடிகை ஷெர்லின் சோப்ரா மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனால் போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.  எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகை ராக்கி சாவந்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீனை நிராகரித்துவிட்டது.  இதையடுத்து, நடிகை ராக்கி சாவந்த் அம்போலி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது நடிகை ராக்கி சாவந்த் தனக்கு ஜாமீன் வழங்கிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். நடிகை ராக்கி சாவந்த் மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா இருவரும் கடந்த 2022 நவம்பர் மாதத்திலிருந்து ஒருவர்மீது மற்றொருவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர் மீது மற்றொருவர் என மாறி மாறி போலீசில் புகார் தெரிவித்ததும் இங்கு...