நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்..
சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறினார்..
சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. எந்த கடவுளுமே தன் கோவிலுக்கு இன்னார் எல்லாம் வரக்கூடாது, இன்னார்தான் வரவேண்டும் என சொல்லவில்லை. இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்ட சில சட்டங்கள்தான். எந்த கடவுள் சொல்லியிருக்கார்? யாராவது? ஒரு கடவுளாவது அப்படி சொல்லியிருக்கிறாரா?.
நான் சபரிமலை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகவே எந்த கடவுளின் கோயிலிலும் இப்படி செய்யக்கூடாது, இதை செய்யவேண்டும், இதை உணவை சாப்பிடக்கூடாது, தீட்டு உள்ளிட்ட பல விஷயங்களும் நாமாகவே உருவாக்கினதுதான். என்னைப் பொருத்தவரை, கடவுளுக்கும், இதற்கும் சம்மந்தமே இல்லை என்றுதான் சொல்லுவேன்.
க/பெ ரணசிங்கம் என ஒரு படம் பண்ணியிருப்பேன். அதில், எனக்கு தங்கை கேரக்டர். அதில் பீரியட் நேரத்தில் சமைக்காமல் வீட்டில் இருக்கும்போது நான் ஒரு வசனம் சொல்லியிருப்பேன், எந்த கடவுளுமே தீட்டு, கீட்டு கோயிலுக்கு வரக்கூடாது என்று சொன்னது கிடையாது, இது நாமளாகக் உருவாக்கிக்கொண்ட விஷயங்கள்தான்.. மேலும் கடவுள் எந்த சட்டமும் வைக்கவில்லை. நான் இவற்றையெல்லாம் நம்புவதும் கிடையாது. எனக்கு இவ்விதமான நம்பிக்கைகளும் இல்லை” என பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளித்தார்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக