முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப்ளூ காலர் வேலை & ஒயிட் காலர் வேலை வித்தியாசம் என்ன?


ப்ளூ காலர் வேலை & ஒயிட் காலர் வேலை வித்தியாசம் என்ன?

தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலைகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறார்கள். காலர் வண்ணங்களின் அடிப்படையில் தொழிலாளர்களை 2 பிரிவாக அதாவது ப்ளூ காலர் தொழிலாளர்கள் மற்றும் ஒயிட் காலர் தொழிலாளர்கள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.

உதாரணமாக: ப்ளூ காலர் தொழிலாளர்கள் என்பவர்கள் பொதுவாக உடல் உழைப்பைச் செய்கிறவர்கள் மணி கணக்கில் அல்லது துண்டு வேலை அடிப்படையில் ஊதியம் பெறுகிறவர்கள். அதேபோல ஒயிட் காலர் தொழிலாளர்கள் என்பவர்கள் அலுவலக அமைப்புகளில் எழுத்தர், நிர்வாகி அல்லது நிர்வாகப் பொறுப்புகளில் காணப்படுகிறவர்கள். இவர்கள் பொதுவாக மாதச் சம்பளம் பெறுகிறவர்கள்.

இரண்டிற்கும் இடையே உள்ள மற்ற முக்கிய வேறுபாடுகள், வேறுபட்ட கல்விப் பின்னணி மற்றும் சமூக பிரிவுகள் ஆகியவை அடங்கும். இவை 100% உண்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் ப்ளூ காலர் தொழிலாளி என்பது கடின உழைப்பில் ஈடுபடும் நபர்களைக் குறிக்கிறது, பொதுவாக விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், சுரங்கம் மற்றும் பராமரிப்புத் துறைகள். இவர்களில் பெரும்பாலோர் தொன்றுதொட்டு அவர்கள் வேலை செய்யும் போது ப்ளூ காலர் சட்டைகளை அணிந்திருந்தனர்.

சில ப்ளூ காலர் தொழிலாளர்கள் உடல்சோர்வு தரும் பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். அவர்கள் அலுவலகங்களுக்கு வெளியில் வேலை செய்யலாம் அல்லது கனரக இயந்திரங்கள் இயக்கலாம் அல்லது விலங்குகளுடன் வேலை செய்யலாம். இந்த தொழிலாளர்கள் திறமையானவர்களாகவோ அல்லது திறமையற்றவர்களாகவோ இருக்கலாம். இவர்கள் ஏதேனும் ஒரு வேலையில் அல்லது ஒரு தொழிற்பள்ளியில் திறன்களைப் பெற்றிருக்கலாம். 

ஒயிட் காலர் தொழிலாளர்கள் பெரும்பாலும் அலுவலக அமைப்புகளில் காணப்படுகின்றனர். அவர்கள் பொதுவாக ஒயிட் காலர் சட்டைகளை அணிந்து சூட் மற்றும் டை ஆகியவற்றுடன் காணப்படும் தொழிலாளர்கள். அவர்களின் வேலைகளில் எழுத்தர், நிர்வாகம் அல்லது மேலாண்மை அமைப்புகளில் மேசையில் பணிபுரிவார்கள். ப்ளூ காலர் தொழிலாளர்களைப் போலன்றி, ஒயிட் காலர் தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாக உழைக்கும் வேலைகள் இல்லை.

உதாரணமாக: ஒரு அலுவலகத்தில் நிர்வாக உதவியாளர், தரவுகளை உள்ளிடும் எழுத்தர் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர். ஒயிட் காலர் வேலைகளில் உள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் மாதாந்திர சம்பளத்தைப் பெறுகிறார்கள்.

பல்வேறு தொழிலாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? தொழிலாளர்கள் எந்த அளவிற்கு படித்திருக்கிறார்கள்? அவர்களின் தோற்றம்? மற்றும் சமூக பிரிவுகள்? ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இவை எதுவும் 100% உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இன்றைய சமூகத்தில் ப்ளூ காலர் வேலைகளை விட, ஒயிட் காலர் வேலைகள்தான் அதிகம் விரும்பப்படுகின்றன. ஏனென்றால் பெரும்பாலும் உடல் உழைப்பு வேலைகளைவிட, மூளை உழைப்பு வேலைகள் சிறந்தது என மக்கள் உணர்கின்றனர். எளிமையாகச் சொல்வதானால், உற்பத்தி அல்லது விவசாயத்துறையில் உள்ள வேலைகளைவிட அலுவலக வேலைகளை மக்கள் மிகவும் விரும்புகின்றனர். -கட்டுரை இன்வெஸ்டோபீடியா


கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...