முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாவித்ரிபாய் பூலேயின் கனவை நனவாக்குகிறது அக்ரேசரின் நூலகம் ..

அக்ரேசரின் நூலகம் சாவித்ரிபாய் பூலேயின் கனவை நனவாக்குகிறது..

பெண் கல்விக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியவருமான  சாவித்ரிபாய் பூலேயின் பிறந்தநாளில். சாவித்ரிபாயை நாடு நினைவுகூருவது நல்ல விஷயம், அதேபோல் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், சாவித்ரிபாய் பூலே மற்றும் அவரது கணவர் ஜோதிபா பூலே ஆகியோரால் தொடங்கப்பட்ட பெண்கல்வி மற்றும் உரிமைக்கான பிரச்சாரம் இன்னும் முழுமையடையவில்லை பல திசைகளில் முயற்சிகள் எடுக்கப்படவேண்டியதாக இருகின்றன, அந்த முயற்சிகளின் வேகம் சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும் இருக்கிறது. சில சமயங்களில் நாம் சுதந்திரம் பெறுவதற்குப் பதிலாக, நாம் எதிர் திசையில் நகர்கிறோம் என்று தோன்றுகிறது. இத்தகைய எதிர்மறை சிந்தனைகளுக்கு மத்தியில், உத்திரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள அக்ரேசர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள சாவித்ரிபாய் பூலே நூலகம் குறிப்பிடத்தக்க ஒன்று.

சாவித்ரிபாய் 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகானில் பிறந்தார். 9 வயதில் ஜோதிபா பூலே என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகும் வரை சாவித்திரிபாய் கல்வி கற்கவில்லை. அவரது தந்தை உயர்சாதி ஆண்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை உண்டு என்று நம்பினார், ஆனால் சாவித்திரிபாய் பூலேயின் கணவர் ஜோதிராவ் பூலே தலித்துகளுக்கும், பெண்களுக்கும் கல்வி மிகவும் முக்கியமானது என்று நம்பினார். கல்வியின் மூலமே அவர்கள் சுயசார்புடையவர்களாகவும், சுரண்டலில் இருந்து விடுபடவும் முடியும் என நினைத்தார். அவர் முதலில் தனது யோசனையை தன் இல்லத்திலிருந்து செயல்படுத்தினார். அவரது மனைவி சாவித்ரிபாய் பூலேவுக்கு கல்வி கற்பித்தார். அதன் பிறகு இருவரும் சமூகத்தின் நிலையை மாற்றப் புறப்பட்டனர். ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் இருவரும் இணைந்து 1848ல் புனேவில் பாலிகா வித்யாலயாவை நிறுவினர். இப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி தொடங்கப்பட்டது. அந்தக்காலத்தில், சாதிய சமூகத்தின் குறுகிய மனப்பான்மையால் கல்வி கொடுக்கும் வேலை எளிதானதாக இருக்கவில்லை. சாவித்திரிபாய் பூலே துன்புறுத்தப்பட்டார். இல்லத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில், அழுகிய தக்காளி, முட்டை, குப்பை, மாட்டுச்சாணம், கற்கள் போன்றவற்றை அவர்மேல் சாதிய பிற்போக்குவாதிகள் எறிவது வழக்கமாக வைத்திருந்தனர். பள்ளிக்கு வந்தவுடன் வேறு துணிகளை பையில் வைத்துக்கொண்டு உடை மாற்றிக்கொள்வார். எதிர்ப்பும், தொல்லைகளும் சாவித்ரிபாய் பூலேயின் மனதை உடைக்கமுடியவில்லை. 1 ஜனவரி 1848 முதல் 15 மார்ச் 1852 வரை, சாவித்ரிபாய் பூலே மற்றும் ஜோதிபா பூலே எந்த நிதிஉதவியும், யாருடைய ஆதரவும் இல்லாமல் பெண்களுக்காக 18 பள்ளிகளைத் திறந்தனர். அந்தக்காலகட்டத்தில் இதுபோன்ற சமூக முன்முயற்சிக்கு வேறு உதாரணம் இல்லை.

பெண்களின் நிலையை மேம்படுத்த, சாவித்ரிபாய் பூலே 1852இல் "மகிளா மண்டல்", 1853இல் "குழந்தைக்கொலை தடுப்பு இல்லம்", 1855இல் ஜோதிபாவுடன் இணைந்து தொழிலாளர்களுக்கான "இரவுப் பள்ளி" ஆகியவற்றைத் தொடங்கினார். செப்டம்பர் 24, 1873இல், பூலே தம்பதியினர் சத்யசோதக் சமாஜை நிறுவியதன் மூலம் விதவை மறுமணம் செய்யும் பாரம்பரியத்தைத் தொடங்கினர். புனேயில் பஞ்சத்தின் போது குழந்தைகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்தனர். 1897இல், புனேவில் கடுமையான பிளேக் தொற்றுநோய் பரவியபோது, ​​சாவித்ரிபாய் பூலே தனது வளர்ப்பு மகன் யஷ்வந்தின் உதவியுடன் ஒரு மருத்துவமனையைத் திறந்தார். நோய்வாய்ப்பட்டவர்களிடம் சென்று, சேவைசெய்து, கவனித்து, மருத்துவமனைக்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த செயல்பாட்டில், அவரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார், மார்ச் 10, 1897 அன்று, சாவித்ரிபாய் பூலே இந்த நோயால் இறந்தார். பல கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலம் சமூக உணர்வை வளர்த்தவர் சாவித்திரிபாய் பூலே. 'காவ்யா பூலே', 'பவன்காஷி சுபோத் ரத்னாகர்', 'மாதோஸ்ரீயின் பேச்சு', 'பவன்காஷி சுபோத் ரத்னாகர்' போன்றவை இவரது முக்கியப் படைப்புகள்.

175 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இந்த சமூகப்பணிகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. நம்பிக்கையால் நம்மை நிரப்புகிறது. இதனையே இன்றைய நடைமுறையில் யோசித்து முயற்சிகள் செய்தாலும்கூட, தலித்துகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்கும், பொருளாதார தன்னிறைவுக்கும் பல இடையூறுகள் இன்றும் உள்ளன எனும்போது நமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ​​அக்காலத்தைப் போலவே இன்றும் நேர்மையான முயற்சிகள் தேவை என்பதை நம்மால் உணரமுடிகிறது. பூலே தம்பதியினரின் உறுதியால் பல கரங்கள் ஒன்று சேர்ந்தது நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறது. சமகாலத்தில் பூலே தம்பதியினர் கண்ட கனவு, மம்தா சிங் என்ற ஆசிரியையின் கண்களில் வளர்ந்து, அமேதி கிராமத்தில் ஒரு நூலகம் திறக்கப்பட்டதன் மூலம் மேலும் நனவாகியது. மம்தா சிங்கின் புதிய நூலக முயற்சி பலரால் கேலி செய்யப்பட்டது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதபோது நூலகத்தால் என்ன பயன்? என்ற கேள்விகள் எழுந்தன. எந்த அமைப்பின் உதவியும் இல்லாமல், வசதியில்லாத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாட்டின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த நாளான ஜனவரி 3, 2018 அன்று புதியநூலகம் அமேதி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து சில புத்தகங்களும், சில பரிசு புத்தகங்களும் இந்த நூலகத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

கனவை நிறைவேற்றுவது மட்டும் அல்ல. உண்மையில் இந்த நூலகத்திற்கு வருகை தருவது ஒரு கனவு போன்றது. இந்தப் பயணத்தின் பொன்னான கதையை அனுபவ் விவரிக்கிறார். பள்ளி முடிந்தவுடன், குழந்தைகள் கூட்டமாக நூலகத்தை அடைகிறார்கள். புத்தகங்களுக்கிடையில் எட்டிப் பார்க்கும் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இடம் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். இதற்கு முன் சில குழந்தைகளை அன்புடன் அவர்களது இல்ல வாசலில் அழைத்து பெயர் மற்றும் முகவரியைக் கேட்டபோது, ​​தயங்கித் தயங்கித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் ஆனால் இன்று நிலைமை மேம்பட்டுள்ளது என்கிறார் மம்தா சிங். பல நூற்றாண்டுகளாகப் பறிக்கப்பட்ட கல்வி எனவே புத்தகங்களின் ஈர்ப்பால் கவரப்பட்ட இந்தக் குழந்தைகள் நூலகத்திற்கு வந்தது என் கண்களையும் இதயத்தையும் நிறைத்தது என்கிறார் மம்தா சிங். தொடர்ந்து கூறுகையில் நூலகத்தை திறந்து வைத்தது மிகவும் பயனுள்ள வகையில் மக்களுக்கு அமைந்துள்ளது என்கிறார். சமுதாயத்தின் ஒவ்வொரு வகுப்பினரும், ஒவ்வொரு மட்டத்தினரும் ஒன்றாகப் படிக்கவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இது எனது பணி, இது எனது சாதனை எனவும் பெருமைகொள்கிறார் மம்தா சிங்.

அக்ரேசர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நூலகம் நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலேயின் கனவை நிறைவேற்றி வருகிறது.

இந்த நூலகம் 24 மணி நேரமும் முற்றிலும் இலவசம். புத்தகத்தை இல்லத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பதிவேடு உள்ளது, அதில் புத்தகம் எடுத்தவர் புத்தகத்தின் பெயரை உள்ளிடுவார். புத்தகங்களை எடுத்துச்செல்வதும், திருப்பிக் கொடுப்பதும் குழந்தைகளின் பழக்கமாக மாறியிருக்கிறது.

அக்ரேசர் கிராமத்தில் உள்ள சாவித்ரிபாய் பூலே நூலகம் உண்மையிலேயே நம்பிக்கையின் மரம். தோற்றத்தில் சிறியதாகத் தோன்றினாலும் பலஜோடிக் கண்கள் கனவுகாணவும், அவற்றை நிறைவேற்றவும் தைரியத்தைக் கொடுக்கின்றது. புத்தகங்களால் குழந்தைகள் தங்களின் சமூகத்தை புரிந்துகொள்வதோடு சரியான பாதையில் நடக்கிறார்கள், அந்த பாதை நிச்சயமாக அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் பாதை. வானத்தில் ஓட்டைகள் இருக்கிறது, கல்லெறியும் ஆள்தான் தேவை என்பதை நிரூபிக்கும் முயற்சிதான் இந்த நூலகம். அத்தகைய முயற்சிகளை நம்மால் செய்யமுடியாவிட்டாலும், அத்தகைய முயற்சிகளுக்கு வணக்கம் செலுத்துவது சாவித்ரிபாய் பூலேவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.. நன்றி: News18 Hindi

கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...