தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன..
தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றது தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றிய முக்கிய மசோதாக்கள் பலவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறார். இதுபோன்ற தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது தமிழ்நாடு அரசு கொடுத்திருந்த உரையை படிக்காமல், தானாக சில பத்திகளை சேர்த்தும், சில பத்திகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிர்வினையாக அக்கனமே, ஆளுநரின் உரைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டுவந்து அவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த உரையை, அவை குறிப்பிலிருந்து நீக்கினார். இதனால் ஆளுநர் பாதியிலேயே அதாவது தேசியகீதம் இசைப்பதற்கு முன்னரே அவையை விட்டு வெளியேறினார். இதுதொடர்பாக திமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை விமர்சித்து வந்தன.
இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தேநீர் விருந்தை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆளுநரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ஆளுநர் ஆளுநராக இல்லை, அவர் ஆர்எஸ்எஸ்காரராக செயல்படுகிறார். எனவே தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கமாட்டோம், புறக்கணிக்கிறோம்” என கூறியுள்ளார்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக