முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லோரா குடைவரை கோவில்கள் பற்றி..


எல்லோரா குடைவரை கோவில்கள் பற்றி..

இந்தியாவில் இருக்கின்ற மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒளரங்காபாத் நகரத்திற்கு அருகில் இருக்கிறது எல்லோரா குடைவரை கோவில்கள். இந்தக் கோவில்கள் இந்தியாவின் மிக முக்கியமான தொல்லியல் தளம் ஆகும். இந்தியத் தொல்லியல்துறை இந்த கோவில்களை பராமரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தக் கோவில்களை உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 28-கி.மீ தொலைவில் இருக்கின்ற சரணாந்திரி மலையில்தான் இந்த எல்லோரா குகைக்கோவில்களும் இருக்கிறது. ஒற்றைப் பாறையை மேலிருந்து கீழாக குடைந்து அதாவது உளி, சுத்தி மாதிரியான கருவிகளை பயன்படுத்தி கோவில்களை உருவாக்கியிருக்கிறார்கள். எல்லோராவில் 2 கி.மீட்டர் சுற்றளவிற்கு மொத்தம் 34-குடைவரைக் கோவில்களை அக்காலத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த குடைவரைக் கோவில்களை உருவாக்கிய காலம் 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை. 3-கட்டங்களாக இந்த கோவில்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

முதல் 12 குடைவரைக் கோவில்கள் பார்த்தீர்களென்றால் எல்லாமே பௌத்தக் கோவில்கள். இவை 6-ம் நூற்றாண்டிலிருந்து 8-ம் நூற்றாண்டுக்கு இடையில் உருவாக்கியிருக்கிறார்கள். இதுதான் ஆரம்பகால குகைகள் என்று சொல்கிறார்கள். இதில் பல அடுக்குகளில் பெளத்த துறவிகள் தங்குவதற்கு தங்குமிடங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

அடுத்தடுத்த 17 குடைவரைக் கோவில்களை பார்த்தீர்களென்றால் இந்துக் கோவில்கள். இது 7-ம் நூற்றாண்டிலிருந்து 10-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

மீதமிருக்கிற 5 குடைவரைக் கோவில்களை பார்த்தீர்களென்றால் சமணர்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தும் 9-நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த 3-மதக் கோவில்களும் ஒரே காலகட்டத்தில் மக்களுக்காக வழிபாட்டில் இருந்திருக்கிறது.

இந்த குகை கோவில்களை உருவாக்கியவர்கள் 3-மதங்களுக்கும் சமமான ஆதரவை கொடுத்து 3-மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடும் நடத்திக்கொண்டு, அதோடு அவர்களின் மதக்கல்வியையும் நடத்திக்கொள்ள அனுமதித்திருக்கிறார்கள்.

சுமார் 7-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ள கைலாசநாதர் கோவிலை பார்த்தீர்களென்றால் பிரமாண்டமான ஒரே கல்லில் மேலிருந்து கீழாக செதுக்கி உருவாக்கியிருக்கிறாரர்கள். 148-அடி நீளமும், 62-அடி அகலமும், 100-அடி உயரமுமாக இருக்கிறது இந்த குடைவரைக் கோவில்.

கயிலாசநாதர் கோவில் உருவாக்கியது யாரென்று பார்த்தீர்களென்றால் ராஷ்டிரகூட வம்சத்து அரசர் முதலாவது-கிருஷ்ணர். அவருடைய காலம் பார்த்தீர்களென்றால் கிபி-757 நூற்றாண்டிலிருந்து கிபி-773 நூற்றாண்டு வரை.

வரலாற்றில் ஆர்வம் இருக்கிறவர்கள், கலை ஆர்வம் இருக்கிறவர்கள் மற்றும் சுற்றுலா போகலாமென்று நினைக்கிறவர்கள் இந்த எல்லாரோ குகை கோவிலுக்கு ஒருமுறை போய்வரலாம்.

ஔரங்காபாத்திலிருந்து 28-கிலோ-மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த எல்லோரா குகைகள். சென்னையிலிருந்து 1199-கிலோ-மீட்டர் தொலைவில் இருக்கிறது.

எல்லோரா குகைகளை பார்வையிடுவதற்கு நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதத்திற்குள் சென்றால் சிறந்ததாக இருக்குமென்று சொல்கிறார்கள்.

இந்த எல்லோரா தொல்லியல் தளம் பார்த்தீர்களென்றால், காலை 8-மணியிலிருந்து மாலை 5.30-மணி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்திருக்குமாம். எல்லோரா குகைகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை என்று சொல்கிறார்கள்.

எல்லோரா குகைகளை சுற்றிப் பார்க்க வருகிற இந்தியப் பயணிகளிடம் 35-ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். பிறநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் 550-ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். 15-வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

வரலாறு ஆராய்ச்சி செய்கிறவர்கள், பயணங்களை விரும்புகிறவர்கள், இந்தியத் தொன்மைகளை தெரிந்துகொள்ள நினைக்கிறவர்கள், சிற்பம் மற்றும் ஓவியக் கலையில் தீராத ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த எல்லோரா குகை கோவில்களுக்கு ஒருமுறை சென்றுவரலாம்.

கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...