முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாகவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?..


விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றோடு முடிவுற்றது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா ஆகியோர் வெளியேறினார்கள். கடைசி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் கடைசி வாரத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் பிக்பாஸில் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் ரூ11.75000 லட்சத்துடன் வெளியேறினார். இதனால் அசீம், விக்ரமன், மைனா மற்றும் சிவின் ஆகிய 4 பேர் மட்டுமே இறுதிப் போட்டியை நோக்கியிருந்த நிலையில், இந்த சீஸனின் கடைசி ஏவிக்ஷனில் மைனாவும் வெளியேறினார்.

இதனால் இந்த சீசனில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். பிக்பாஸ் பார்வையாளர்கள் அசின் வெல்வார், இல்லையெனில் விக்ரமன் வெல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்புகள் இருந்த நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றுவிட்டார். இவரை தொடர்ந்து விக்ரமன் 2ஆம் இடமும், ஷிவினுக்கு 3ம் இடமும் கிடைத்தது. முதலிடத்தை பிடித்த அசீமிற்கு ரூ50,00,000 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் கார் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே அசீம் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தார். பலமுறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்றதால் இவர்தான் பிக்பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறார் என குறிப்பிட்ட பார்வையாளர்கள் இவருக்கு ஆதரவளித்து வந்தனர்.

இருந்தாலும், அசீம், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை தனது வேலையாகவே வைத்து வந்ததிருந்தார். கமல் அடிக்கடி அறிவுரை கூறினார், இருந்தாலும், மீண்டும் மீண்டும் அசீம் தனது அடாவடியை தொடர்ந்து வந்தார். எனவே அசீமை வெளியேற்ற வேண்டுமென்று அடிக்கடி ட்விட்டரில் #RedCardAzeem என்ற ஹேஷ் டேக்கை, அசீமை விரும்பாத பிக்பாஸ் பார்வையாளர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். மேலும், அசீம் வெற்றிபெற்றால் அது தவறான உதாரணமாக இருந்துவிடும் என்று பலரும் கூறி வந்தனர்.

மேலும், நல்ல சமூக கருத்துக்களை பேசிவந்த விக்ரமன்தான் வெல்வார் என்று பெரும்பாலான பார்வையாளர்கள் எதிர்பார்த்து வந்தனர். இப்படியான நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து, பார்வையாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அடாவடியாக நடந்து, பிறரை இழிவுபடுத்தி விளையாடினால் பிக்பாஸில் வெற்றி பெறலாமா? என கேள்விகளை எழுப்புவதோடு, விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட்டும் செய்து வருகிறார்கள் பிக்பாஸ் பார்வையாளர்கள்.

கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...