விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாகவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?..
விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றோடு முடிவுற்றது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா ஆகியோர் வெளியேறினார்கள். கடைசி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் கடைசி வாரத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் பிக்பாஸில் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் ரூ11.75000 லட்சத்துடன் வெளியேறினார். இதனால் அசீம், விக்ரமன், மைனா மற்றும் சிவின் ஆகிய 4 பேர் மட்டுமே இறுதிப் போட்டியை நோக்கியிருந்த நிலையில், இந்த சீஸனின் கடைசி ஏவிக்ஷனில் மைனாவும் வெளியேறினார்.
இதனால் இந்த சீசனில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். பிக்பாஸ் பார்வையாளர்கள் அசின் வெல்வார், இல்லையெனில் விக்ரமன் வெல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்புகள் இருந்த நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றுவிட்டார். இவரை தொடர்ந்து விக்ரமன் 2ஆம் இடமும், ஷிவினுக்கு 3ம் இடமும் கிடைத்தது. முதலிடத்தை பிடித்த அசீமிற்கு ரூ50,00,000 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் கார் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே அசீம் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தார். பலமுறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்றதால் இவர்தான் பிக்பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறார் என குறிப்பிட்ட பார்வையாளர்கள் இவருக்கு ஆதரவளித்து வந்தனர்.
இருந்தாலும், அசீம், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை தனது வேலையாகவே வைத்து வந்ததிருந்தார். கமல் அடிக்கடி அறிவுரை கூறினார், இருந்தாலும், மீண்டும் மீண்டும் அசீம் தனது அடாவடியை தொடர்ந்து வந்தார். எனவே அசீமை வெளியேற்ற வேண்டுமென்று அடிக்கடி ட்விட்டரில் #RedCardAzeem என்ற ஹேஷ் டேக்கை, அசீமை விரும்பாத பிக்பாஸ் பார்வையாளர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். மேலும், அசீம் வெற்றிபெற்றால் அது தவறான உதாரணமாக இருந்துவிடும் என்று பலரும் கூறி வந்தனர்.
மேலும், நல்ல சமூக கருத்துக்களை பேசிவந்த விக்ரமன்தான் வெல்வார் என்று பெரும்பாலான பார்வையாளர்கள் எதிர்பார்த்து வந்தனர். இப்படியான நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து, பார்வையாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அடாவடியாக நடந்து, பிறரை இழிவுபடுத்தி விளையாடினால் பிக்பாஸில் வெற்றி பெறலாமா? என கேள்விகளை எழுப்புவதோடு, விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட்டும் செய்து வருகிறார்கள் பிக்பாஸ் பார்வையாளர்கள்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக