முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு ஆளுநர் விரைவில் மாற்றம்? பிரஸ் மீட்டில் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!..


தமிழ்நாடு ஆளுநர் விரைவில் மாற்றம்? பிரஸ் மீட்டில் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!..

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி ஆளுநர் விரைவில் மாற்றப்படலாம் என்று பிரஸ் மீட்டில் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்குகள் வாடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா எனப் பல மாநிலங்கள் இதற்கு உதாரணம்.

அதேபோல், தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு சமீப காலமாக நிலவி வருகிறது. தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்கவேண்டும் கூறியதோடு இல்லாமல், ஆவணங்களில் தமிழகம் என பயன்படுத்தவும் செய்தார் ஆளுநர் RN.ரவி. இந்த சர்ச்சை பெரிய தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. நடந்து முடிந்த, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் RN.ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல், தன் இஷ்டப்படி சில பகுதிகளைத் தவிர்த்து வாசித்தது பெரும் சர்ச்சையைக் உருவாக்கியது. இதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அக்கணமே ஆளுநர் உரை செல்லாது என தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.


இச்சூழலில் ஆளுநர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளதாவது. சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. டெல்லி சென்று திரும்பியதில் இருந்தே மாநில அரசுக்கு எதிரான போக்கை அவர் கடைப்பிடிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

தற்போதுள்ள ஆளுநர் RN.ரவிக்குப் பதிலாக, வேறு ஒருவரை நியமிக்க இருப்பதாகத் தகவல் வருகிறது' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர், 'வடமாநிலங்களில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த ஆரம்பித்தே விட்டார்கள் என்றார். தமிழ்நாட்டிலும் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தவேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு செய்யவேண்டும்' என்றார். 

மேலும், அதிமுக மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை அவர்கள் சீக்கிரம் சரி செய்ய வேண்டும். இந்த பூசல் பாஜகவுக்கே சாதகமாக அமையும். அங்குள்ள இரு பிரிவுகளும், இப்போது பாஜகவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு காவடி தூக்குகிறார்கள். இது தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை, அதிமுகவுக்கும் நல்லதில்லை என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிச்சயம் பாடுபடும். சட்டசபைத் தேர்தல் சமயத்தில், திமுக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. மேலும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவோம்' என்றார்.

கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...