முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பட்டியலின மக்களின் வீடுகள் மீது சாதிவெறியர்கள் வன்கொடுமை தாக்குதல்..

வீடுகள், வாகனங்கள் சேதம்:

பட்டியலின மக்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிய அரசியல் பிரமுகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் வீடுகளுக்கு சென்ற (18.01.2023 அன்று) சாதிய ஆதிக்க சக்தியை சேர்ந்தவர்கள் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கைகளில் தடி, கம்புகளுடன் அந்த பகுதிக்குள் புகுந்து குடிநீர் தொட்டி, குடிநீர் குழாய்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சாதிய மோதல்- பதற்றம்:

இத்தகைய மோசமான தாக்குதலால் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பட்டியலின மக்களின் குடியிருப்புகளில் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இத்தாக்குதலில் முக்கிய அரசியல் பிரமுகரான சீனிவாசன் என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பட்டியலின மக்களை தாக்கி சாதிய மோதலையும், பதற்றத்தையும் உருவாக்க முனைந்துள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியின் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

முழுமையான விசாரணை தேவை:

இத்தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்துள்ள காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிலரின் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்திருப்பது மோசமான விளைவுகளையே உருவாக்கும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறோம். எனவே, மூங்கில்துறைபட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தனது முழுமையான வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும், 

கே.பாலகிருஷ்ணன், CPIM கட்சியின் மாநில செயலாளர்

இழப்பீடு வழங்கிடுக:

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டுமெனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்துள்ள மக்களுக்கு சேதத்திற்கு ஈடான உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க முன்வர வேண்டுமென வலியுறுத்துவதாக கே.பாலகிருஷ்ணன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...