முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவியர் மக்புல் ஃபிதா உசைன் அவர்களைப்பற்றி..


ஓவியர் மக்புல்  ஃபிதா  உசைன் 

இந்தியாவின் சிறந்த ஓவியக்கலைஞர் என புகழப்படும், எம்.எஃப்.உசைன் மகாராட்டிரம் மாநிலம் பந்தர்பூரில் 9-6-2011 தேதி பிறந்தார். இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது ஓவிய படைப்புகள் உலகெங்கிலும் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன.


தேசியம்:

ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது. இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006-ஆம் ஆண்டிலிருந்து துபாய் நகரில் வசித்து வந்தார்.


இளமை வாழ்வும், கல்வியும்:

மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்புரில் பிறந்தவர். அவரது சிறு வயதிலேயே தமது தாயாரை இழந்தார். அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டு இந்தூர் சென்றார். தமது துவக்கக் கல்வியை அங்கு கற்ற உசைன் 1935-ஆம் ஆண்டு மும்பையில் ஜே.ஜே கலைப்பள்ளியில் சேர்ந்தார்.


கலை வாழ்வு:

துவக்கத்தில் திரைப்பட விளம்பர தட்டிகள் வரைந்து தமது வாழ்க்கையைத் துவங்கினார். 1940களிலிருந்து அவரது ஓவியப்பணி அறியப்பட்டது. 1952ஆம் ஆண்டு தமது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை சூரிச்சு நகரில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அவர் புகழ் பரவியது. இந்திய அரசு 1955ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இதனைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதும் 1991ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதும் வழங்கியது. இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா விருது வழங்க இவரது இரசிகர்கள் இந்திய அரசிற்கு மனு கொடுத்தனர். இவரது ஓவியம் கிரிஸ்டி ஏல நிறுவனத்தால் $1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டது.


திரைப்படங்கள்:

உசைன் திரைப்படங்களும் எடுத்தார். 1967ஆம் ஆண்டு ‘ஒரு ஓவியரின் பார்வையில்’ (Through the Eyes of a Painter) என்ற படத்தைத் தயாரித்தார். இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி (Golden Bear) விருது பெற்றது. அவரின் அபிமான நடிகை மாதுரி தீட்சித் நடிக்க ‘கஜகாமினி’ என்ற திரைப்படத்தையும், ‘மூன்று நகரங்களின் கதை’ என்ற தபு நடித்த திரைப்படத்தையும் இயக்கினார். அந்த படத்தில் வந்த சில வசனங்கள் குறிப்பிட்ட மதத்தை அவமதிப்பவை என சர்ச்சை எழுந்தது.


சர்ச்சைகள்:

மதக் கடவுள்களை தமது ஓவியங்கள் வழியாக உசைன் அவமதிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் வண்ணம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

மத நம்பிக்கைகளை அவதூறு செய்தார் எனவும், இருவேறு மதத்தினரிடையே பகையுணர்வைத் தூண்டினார் எனவும், உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இச்சர்ச்சைகளால் 2006இல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் துபாய் நகரில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு கத்தார் நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.

கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...