அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை கொண்டுவர வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை..
அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.
எம்பி உதய கம்மன்பில, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில், 
இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை கண்டுபிடிக்கும் சவால் அரசாங்கத்திற்கு இருக்காது.
வாரச் சம்பளம் வாங்கும்போது, அந்த வாரச் செலவுகள்தான் இருக்கும். கடைசி வாரத்தில் சம்பள பற்றாக்குறையால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. 
ஒரே நேரத்தில் பணத்தேவை உள்ளதால், கூலி வாங்குபவரும் மற்றும் கூலி கொடுப்பவரும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்றார். 
மேலும், உலகின் பல நாடுகளிலும் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்திருந்தார்
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக