முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் மீது விமர்சனம் - தலைவர்கள் கடும் கண்டனம்



சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, இடதுசாரி சித்தாந்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சை விமர்சித்தது மீண்டும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களிடையே சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு இந்திய இடதுசாரி எம்பி சு வெங்கடேசன் அவர்களும் மற்றும் இடதுசாரி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பேசுகின்ற, நரித்தனமான பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். பிற்போக்குத்தனமான சனாதன தர்மத்தை ஆதரித்து மூச்சுவிடாமல் மேடைகளில் முனகிவரும் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழர்களின் பெருமைமிகு நூலான திருக்குறளை சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய அறிஞர் ஜி யு போப்பை, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கடுகளவு சம்பந்தமில்லாத ஆளுநர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்நாடு என்பதை தமிழகம் என தமிழ்நாட்டு மக்கள் அழைக்கவேண்டும் என கருத்து தெரிவித்து அதன்பின் தமிழ்நாடு மக்களிடமிருந்து கடுமையான வசைகளும், எதிர்ப்புகளும் எழுந்தவுடன் பச்சோந்தியாக தனது நிலையை மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் இந்துத்துவா கோட்பாட்டாளரின் நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி, சனாதன தர்மம் என்பது விரிவானது. தர்மம் என்பதை நாம் மதம் என புரிந்து கொண்டுவிட்டோம். அப்படி புரிந்து கொண்டதால் மாபெரும் தவறு செய்துவிட்டோம் என்றிருக்கிறார்.

மேலும், நமது இந்திய கொள்கைகள் மேற்கத்திய சிந்தனைகளை பின்பற்றுவதாக இருக்கிறது. "பூமியில் உயிரினங்களின் தோற்றம் பற்றிய மதவாதிகளின் நம்பிக்கைகள்" ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் சார்லஸ் டார்வினின் கோட்பாடும், மூலதனம், உற்பத்தி, உழைப்புச்சுரண்டல், கொள்ளை லாபம் மற்றும் தொழிலாளி வர்க்க விடுதலை பற்றி பேசிய மார்க்சின் கோட்பாடும்தான் இந்தியாவை சீரழித்துவிட்டது எனவும் பேசியுள்ளார்.

உலகில் மதவாதிகளின் கையிலிருந்த ஆட்சி அதிகாரங்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி அரசுகளுக்கு மாறுவதற்கு வழிவகை செய்த ரூசோவின் கோட்பாடு போன்றவையெல்லாம் இந்திய தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டன என பிதற்றியுள்ளார். 

இந்தியாவில், விவசாயிகளுக்கான பிரச்சினைகள், பெண்களுக்கான பிரச்சினைகள், குழந்தைகளுக்கான பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கான பிரச்சினைகள், ஊழல் எதிர்ப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக பல்வேறு தளங்களில் போராடிவரும் இந்திய இடதுசாரிகளின் ஆசானான "கார்ல் மார்க்சின் சிந்தனைகள்தான் இந்தியாவை சிதைத்துவிட்டது" என்றும் ஆளுநர் ஆர்என் ரவி கூறியுள்ளார்.

மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர்கள் மேலே உயர வேண்டும் என்கிறது. இது இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவுகளுக்கு காரணமாக அமைகிறது என்று விமர்சித்ததன் மூலம் ஆளுநர் ஆர்என் ரவி தனது வக்கிரமான பார்ப்பனிய குணாதிசயத்தை வெளிப்படுத்திவிட்டார்.

அதேபோல, உலகில் ஜனநாயகத்துக்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கனை காட்டுகிற போக்கு இருக்கிறது. டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மக்கள் பின்பற்றுகிறார்கள். இவை அனைத்துமே அறிவியலில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளின் தத்துவங்களாகும். இந்திய பேராசிரியர்கள், இந்து தத்துவங்களை உயர்த்திப்பிடிக்காமல், மக்களின் அறிவிற்கும் முன்னேற்றத்திற்கும் துணை செய்யும் ஐரோப்பிய தத்துவங்களை, கோட்பாடுகளை உயர்த்திப்பிடிப்பது வேதனைக்குரியது என்கிற வகையில் ஆளுநர் ஆர்என் ரவி மேடையில் பேசி, தான் யாரென்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்.

கருத்துகள்

My Popular Posts

திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் போதனைகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கிய ஆன்மீகத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இவர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ராமையாப் பிள்ளை சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.  வள்ளலார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, சமத்துவம், கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  அவர் "கடவுள் ஒருவரே" என்ற கருத்தை நம்பினார், மேலும் "கடவுளானவர் கருணையின் வெள்ளமாக மற்றும் மிகவும் இரக்கமுள்ளவராக இருக்கிறார்'' என்றார்.  வள்ளலார் ஆன்மிக ஆசிரியராக மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  அவர் தனது வாழ்க்கையை மனிதாபிமான நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.  அவரது போதனைகளும் பணிகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளன மற்றும் இன்றுவரை பலரை ஊக்கப்படுத்துகின்றன.  "சத்ய தர்மசாலை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியமை அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ...

சிறுகதை: கண்ணீர் விழிகள்

 மலர், 30 வயது பெண். அழகானவர் மற்றும் புத்திசாலி. தனது சிறிய வீட்டில் குழந்தைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். குழந்தைக்கு 5 வயது. விளையாடிக்கொண்டிருக்கிறது. மலர்: (குழந்தையைப் பார்த்து) உன், அப்பாவைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும், ஆனாலும் அவரைப் பற்றி மேலும் சில கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரைப் பற்றி நீ, நன்றாகத் தெரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) சரி அம்மா. மலர்: உன், அப்பா என்னைப் பதின்பருவத்தில் சந்தித்தார். நாங்கள் உடனடியாக நண்பர்களாகிவிட்டோம், எப்போதும் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வோம், ஒன்றாகவே விளையாட்டுகளில் விளையாடுவோம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார், என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். குழந்தை: (அம்மாவைப் பார்த்து) அப்பா, மிகவும் அற்புதமானவர் போல தெரிகிறார். மலர்: ஆமாம். ஒருநாள், நாங்கள் இருவரும் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தோம், அப்போது கடுமையான புயல் வந்தது. எங்களைப் பாதுகாத...

சிறுகதை: ஒரு கிராமமும், சில இளைஞர்களும்..

ஒரு காலத்தில், பசுமையான வயல்வெளிகளுக்கு மத்தியில், முத்தனம்பாளையம் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அதன் குடிமக்கள், முக்கியமாக கூலியாட்கள், கொளுத்தும் வெயிலில் உழைத்த முன்னாள் பண்ணை அடிமைகளின் சந்ததியினர். பல ஆண்டுகளாக, கிராமம் சில மாற்றங்களைக் கண்டது, ஆனால் அக்கிராமத்தை சுற்றிலும் உழைப்பு சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தின் சுழற்சி நீடித்தது. சமூகத்தைப் பாதித்த கல்வியறிவின்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது.   இதில் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வினோத், ராஜ்குமார், மகேந்திரன், பூபாலன், செல்வகணபதி, செல்வராஜ், பாலு, விஜயக்குமார், அய்யப்பன், சக்திவேல் மற்றும் யுவராஜ். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கனவுகள் மற்றும் ஆசைகள் இருந்தன, தங்கள் மூதாதையர்கள் அவலத்தின் கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினர்.   வினோத், ஒரு இளைஞர் மற்றும் உற்சாகமான நபர், இயல்பாகவே கல்வி மீது ஆர்வத்தை கொண்டிருந்தார், இது அவரை கிராமத்தின் எல்லைக்கு அப்பால் அறிவைத் தேடத் தூண்டியது. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும், தனக்காகவும், தன் சமூகத்திற்காகவு...