முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன..

தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றது தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றிய முக்கிய மசோதாக்கள் பலவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறார். இதுபோன்ற தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது தமிழ்நாடு அரசு கொடுத்திருந்த உரையை படிக்காமல், தானாக சில பத்திகளை சேர்த்தும், சில பத்திகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிர்வினையாக அக்கனமே, ஆளுநரின் உரைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டுவந்து அவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த உரையை, அவை குறிப்பிலிருந்து நீக்கினார். இதனால் ஆளுநர் பாதியி...

அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை கொண்டுவர வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை..

அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார். எம்பி உதய கம்மன்பில, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில்,  இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை கண்டுபிடிக்கும் சவால் அரசாங்கத்திற்கு இருக்காது. வாரச் சம்பளம் வாங்கும்போது, அந்த வாரச் செலவுகள்தான் இருக்கும். கடைசி வாரத்தில் சம்பள பற்றாக்குறையால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.  ஒரே நேரத்தில் பணத்தேவை உள்ளதால், கூலி வாங்குபவரும் மற்றும் கூலி கொடுப்பவரும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்றார்.  மேலும், உலகின் பல நாடுகளிலும் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்திருந்தார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்..

சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறினார்.. சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. எந்த கடவுளுமே தன் கோவிலுக்கு இன்னார் எல்லாம் வரக்கூடாது, இன்னார்தான் வரவேண்டும் என சொல்லவில்லை. இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்ட சில சட்டங்கள்தான். எந்த கடவுள் சொல்லியிருக்கார்? யாராவது? ஒரு கடவுளாவது அப்படி சொல்லியிருக்கிறாரா?. நான் சபரிமலை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகவே எந்த கடவுளின் கோயிலிலும் இப்படி செய்யக்கூடாது, இதை செய்யவேண்டும், இதை உணவை சாப்பிடக்கூடாது, தீட்டு உள்ளிட்ட பல விஷயங்களும் நாமாகவே உருவாக்கினதுதான். என்னைப் பொருத்தவரை, கடவுளுக்கும், இதற்கும் சம்மந்தமே இல்லை என்றுதான் சொல்லுவேன்.   க/பெ ரணசிங்கம் என ஒரு படம் பண்ணியிருப்பேன். அதில், எனக்கு தங்கை கேரக்டர். அதில் பீரியட் நேரத்தில் சமைக்காமல் வீட்டில் இருக்கும்போது ந...

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது தாக்குதல்!

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது தாக்குதல்! ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில், BBC  செய்தி நிறுவனத்தின் ஆவணப்படத்தை பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, மாணவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்தேறிய கலவரம் பற்றிய BBC-யின் ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகமே மின்சாரம் மற்றும் இணைய இணைப்பை துண்டித்துவிட்டது. மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் மீது கல் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு, ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர்தான் காரணம் என்று  ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

6 வகையான குற்றவியல் குற்றங்கள்:

6 வகையான குற்றவியல் குற்றங்கள்: மெரியம்-வெப்ஸ்டர் என்கிற மேலைநாட்டு அறிஞர், குற்றம் என்பது "ஒருவரை அரசாங்கத்தால் தண்டிக்கக்கூடிய ஒரு சட்டவிரோத செயல்" என்று வரையறுக்கிறார். எளிமையாகச் சொன்னால், குற்றம் என்பது உள்ளூர், மாநில அல்லது கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாகும். கிரிமினல் குற்றங்கள் கடையில் திருடுவது முதல் கொலை வரை இருக்கலாம். தண்டனைகள் சமூக சேவையிலிருந்து மரண தண்டனை வரை இருக்கலாம். பலவிதமான குற்றச் செயல்கள் இருந்தாலும், ஒரு வலைப்பதிவில் பட்டியலிட முடியாத அளவுக்கு, அவற்றை ஆறு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். கிரிமினல் குற்றங்களின் வகைகளைப் புரிந்துகொள்வது என்பது, குற்றவாளிகளை வேறுபடுத்தி அறிவதோடு, அவர்கள் ஏன் வித்தியாசமாக தண்டிக்கப்படுகிறார்கள்? என்பதைப் பற்றிய நுண்ணறிவைப் பெற உதவும். 1. ஒரு நபருக்கு எதிரான குற்றங்கள்: இது கிரிமினல் குற்றங்களின் மிகக் கடுமையான வகையாகும். ஒரு நபருக்கு எதிரான குற்றங்கள் என்பது, மற்றொரு மனிதனுக்கு உடல்ரீதியான தீங்கு அல்லது மன வேதனையை ஏற்படுத்தும் குற்றங்களாகும். தாக்குதல் மற்றும் குடும்ப வன்முறை போன்ற வன்முறை குற்றங்கள் இந்த வகையின் கீ...

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் குழுவை அமைத்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் குழுவை அமைத்தார். இந்த முயற்சியின் முதல் கட்டமாக, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது என இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். நீதிபதி ஏ.எஸ்.ஓகா உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நாம் வழங்கும் தீர்ப்புகளை இந்திய குடிமக்கள் அவர்கள் பேசும் மொழியில் அணுகவும், புரிந்துகொள்ளவும் முடியும் வரை நீதிக்கான அணுகல் அர்த்தமுள்ளதாக இருக்காது என்று தலைமை நீதிபதி அடிக்கோடிட்டுக் காட்டினார். நீதிபதி ஓகாவைத் தவிர, அக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்: - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ; - தேசிய தகவல் மையத்திலிருந்து சர்மிஸ்தா ; - ஐஐடி டெல்லியில் இருந்து மிதேஷ் கப்ரா ; - ஏக் படி அறக்கட்டளையில் இருந்து விவே...

விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாகவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?..

விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?. . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றோடு முடிவுற்றது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா ஆகியோர் வெளியேறினார்கள். கடைசி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் கடைசி வாரத்தில் இருந்தார்கள். இந்நிலையில் பிக்பாஸில் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் ரூ11.75000 லட்சத்துடன் வெளியேறினார். இதனால் அசீம், விக்ரமன், மைனா மற்றும் சிவின் ஆகிய 4 பேர் மட்டுமே இறுதிப் போட்டியை நோக்கியிருந்த நிலையில், இந்த சீஸனின் கடைசி ஏவிக்ஷனில் மைனாவும் வெளியேறினார். இதனால் இந்த சீசனில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். பிக்பாஸ் பார்வையாளர்கள் அசின் வெல்வார்...

திக்விஜய் சிங்கின் கருத்துக்களிலிருந்து, காங்கிரஸ் மாறுபடுவதாக எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..

இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் நம்பகத்தன்மை குறித்து கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் கருத்துக்களிலிருந்து தான் மாறுபடுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து, கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங்கின் கருத்திலிருந்து தான் மாறுபடுவதாக தெரிவித்துள்ளார் இவ்விஷயத்தில், திக்விஜய் அவரது தனிப்பட்ட கருத்துக்களைப் பிரதிபலித்திருக்கிறார் என்றும் ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார். இந்திய ராணுவத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று காந்தி தெரிவித்தார். ஆயுதப் படைகள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்கின்றன என்பதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம், அதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்கத் தேவையில்லை” என்று ராகுல் காந்தி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். திக்விஜய் சிங் தனது சர்ச்சைக்குரிய கருத்து அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியதால், அதன்பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்பத...

தமிழ்நாடு ஆளுநர் விரைவில் மாற்றம்? பிரஸ் மீட்டில் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!..

தமிழ்நாடு ஆளுநர் விரைவில் மாற்றம்? பிரஸ் மீட்டில் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!.. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி ஆளுநர் விரைவில் மாற்றப்படலாம் என்று பிரஸ் மீட்டில் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தியாவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்குகள் வாடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா எனப் பல மாநிலங்கள் இதற்கு உதாரணம். அதேபோல், தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு சமீப காலமாக நிலவி வருகிறது. தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்கவேண்டும் கூறியதோடு இல்லாமல், ஆவணங்களில் தமிழகம் என பயன்படுத்தவும் செய்தார் ஆளுநர் RN.ரவி. இந்த சர்ச்சை பெரிய தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. நடந்து முடிந்த, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் RN.ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல், தன் இஷ்டப்படி சில ப...

சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா, விசாரணைக்காக அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஆஜராகினார்..

மருத்துவர் ஷர்மிகா தவறான மருத்துவ ஆலோசனைகளை கூறுவதாக எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டார்.. தவறான மருத்துவ ஆலோசனைகளை கூறுவதாக குற்றசாட்டுக்கு உள்ளான, சித்த மருத்துவர் ஷர்மிகா அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஆஜராகினார்.  ஒரு கப் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என ஷர்மிகா சர்ச்சையாக பேசியிருந்தார். இதேபோல் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பொதுவெளியில் தொடர்ந்து கூறி வந்ததால், ஷர்மிகாவை வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஷர்மிகாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.  அறிவியல் ஆதாரங்களோடுதான் மருத்துவ ஆலோசனைகளை கூறினாரா? என்பது குறித்து ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினார்கள்.  மேலும் ஷர்மிகா, மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? எனவும், மேலும் பதிவு செய்துள்ளாரா? எனவும் விசாரணை நடத்தினார்கள்.

பிரபல நடிகை ராக்கி சாவந்த் கைதானார்..

நடிகை ஷெர்லின் சோப்ராவின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நடிகை ராக்கி சாவந்த் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக நடிகை ஷெர்லின் சோப்ரா மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனால் போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.  எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகை ராக்கி சாவந்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீனை நிராகரித்துவிட்டது.  இதையடுத்து, நடிகை ராக்கி சாவந்த் அம்போலி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது நடிகை ராக்கி சாவந்த் தனக்கு ஜாமீன் வழங்கிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். நடிகை ராக்கி சாவந்த் மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா இருவரும் கடந்த 2022 நவம்பர் மாதத்திலிருந்து ஒருவர்மீது மற்றொருவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர் மீது மற்றொருவர் என மாறி மாறி போலீசில் புகார் தெரிவித்ததும் இங்கு...

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பட்டியலின மக்களின் வீடுகள் மீது சாதிவெறியர்கள் வன்கொடுமை தாக்குதல்..

வீடுகள், வாகனங்கள் சேதம்: பட்டியலின மக்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிய அரசியல் பிரமுகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் வீடுகளுக்கு சென்ற (18.01.2023 அன்று) சாதிய ஆதிக்க சக்தியை சேர்ந்தவர்கள் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கைகளில் தடி, கம்புகளுடன் அந்த பகுதிக்குள் புகுந்து குடிநீர் தொட்டி, குடிநீர் குழாய்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். சாதிய மோதல்- பதற்றம்: இத்தகைய மோசமான தாக்குதலால் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பட்டியலின மக்களின் குடியிருப்புகளில் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இத்தாக்குதலி...

எல்லோரா குடைவரை கோவில்கள் பற்றி..

எல்லோரா குடைவரை கோவில்கள் பற்றி.. இந்தியாவில் இருக்கின்ற மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒளரங்காபாத் நகரத்திற்கு அருகில் இருக்கிறது எல்லோரா குடைவரை கோவில்கள். இந்தக் கோவில்கள் இந்தியாவின் மிக முக்கியமான தொல்லியல் தளம் ஆகும். இந்தியத் தொல்லியல்துறை இந்த கோவில்களை பராமரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தக் கோவில்களை உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 28-கி.மீ தொலைவில் இருக்கின்ற சரணாந்திரி மலையில்தான் இந்த எல்லோரா குகைக்கோவில்களும் இருக்கிறது. ஒற்றைப் பாறையை மேலிருந்து கீழாக குடைந்து அதாவது உளி, சுத்தி மாதிரியான கருவிகளை பயன்படுத்தி கோவில்களை உருவாக்கியிருக்கிறார்கள். எல்லோராவில் 2 கி.மீட்டர் சுற்றளவிற்கு மொத்தம் 34-குடைவரைக் கோவில்களை அக்காலத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த குடைவரைக் கோவில்களை உருவாக்கிய காலம் 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை. 3-கட்டங்களாக இந்த கோவில்களை உருவாக்கியிருக்கிறார்கள். முதல் 12 குடைவரைக் கோவில்கள் பார்த்தீர்களென்றால் எல்லாமே பௌத்தக் கோவில்கள். இவை 6-ம் நூற்றாண்டிலிருந்து 8-ம் நூற்ற...

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் அஜந்தா குகைகள்..

இந்தியாவில் இருக்கும் குகை ஓவியங்களில் அஜந்தா மிகவும் புகழ்பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒளரங்காபாத் மாவட்டத்தில் இருக்கிறது அஜந்தா கிராமம். இங்கிருந்து 12-கிலோமீட்டர் தொலைவில் அழகான சிற்பக் குகைகள் இருக்கின்றன.  2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மக்களின் வாழ்க்கை முறை, கலை மற்றும் கட்டிடக்கலை போன்றவை உன்னத நிலையில் இருந்ததை இந்த ஓவியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. புத்தர் தன்னுடைய உருவத்தை ஓவியங்களாகவோ சிற்பங்களாகவோ உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்கு பின் வந்த சீடர்கள் புத்தமதக் கொள்கைகளை வெளி உலகத்துக்கு சொல்லவும், பரப்பவும் விரும்பினர். அதனால் புத்தரின் உருவத்தை ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் வடித்தனர். இயற்கையான குகைகள் மட்டுமல்லாமல், செயற்கையான குகைகளையும் உருவாக்கினர். மழைக்காலங்களில் தங்குவதற்கு மடாலயங்களையும், வழிபடுவதற்கு வழிபாட்டு ஸ்தலங்களையும் அமைத்தனர். அஜந்தா குகைகள் வகோரா நதியின் பள்ளத்தாக்கில் சயாத்ரி குன்றின் மேல் அமைந்துள்ளன. அமைதியான அழகான சூழல் கொண்ட இந்த இடத்தில் 30-குகைகள் உருவாக்கப்பட்டன. இவை குதிரையின் குளம்பு போன்ற வடிவ...

ஓவியர் மக்புல் ஃபிதா உசைன் அவர்களைப்பற்றி..

ஓவியர் மக்புல்  ஃபிதா  உசைன்   இந்தியாவின் சிறந்த ஓவியக்கலைஞர் என புகழப்படும், எம்.எஃப்.உசைன் மகாராட்டிரம் மாநிலம் பந்தர்பூரில் 9-6-2011 தேதி பிறந்தார். இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது ஓவிய படைப்புகள் உலகெங்கிலும் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. தேசியம்: ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது. இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006-ஆம் ஆண்டிலிருந்து துபாய் நகரில் வசித்து வந்தார். இளமை வாழ்வும், கல்வியும்: மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்புரில் பிறந்தவர். அவரது சிறு வயதிலேயே தமது தாயாரை இழந்தார். அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டு இந்தூர் சென்றார். தமது துவக்கக் கல்வியை அங்கு கற்ற உசைன் 1935-ஆம் ஆண்டு மும்பையில் ஜே.ஜே கலைப்பள்ளியில் சேர்ந்தார். கலை வாழ்வு: துவக்கத்தில் திரைப்பட விளம்பர தட்டிகள் வரைந்து தமது வாழ்க்கையைத் துவங்கினார். 1940களிலிருந்து அவரது ஓவியப்பணி அறியப்பட்டது. 1952ஆம் ஆண்டு தமது தன...

சாவித்ரிபாய் பூலேயின் கனவை நனவாக்குகிறது அக்ரேசரின் நூலகம் ..

அக்ரேசரின் நூலகம் சாவித்ரிபாய் பூலேயின் கனவை நனவாக்குகிறது.. பெண் கல்விக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியவருமான  சாவித்ரிபாய் பூலேயின் பிறந்தநாளில். சாவித்ரிபாயை நாடு நினைவுகூருவது நல்ல விஷயம், அதேபோல் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், சாவித்ரிபாய் பூலே மற்றும் அவரது கணவர் ஜோதிபா பூலே ஆகியோரால் தொடங்கப்பட்ட பெண்கல்வி மற்றும் உரிமைக்கான பிரச்சாரம் இன்னும் முழுமையடையவில்லை பல திசைகளில் முயற்சிகள் எடுக்கப்படவேண்டியதாக இருகின்றன, அந்த முயற்சிகளின் வேகம் சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும் இருக்கிறது. சில சமயங்களில் நாம் சுதந்திரம் பெறுவதற்குப் பதிலாக, நாம் எதிர் திசையில் நகர்கிறோம் என்று தோன்றுகிறது. இத்தகைய எதிர்மறை சிந்தனைகளுக்கு மத்தியில், உத்திரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள அக்ரேசர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள சாவித்ரிபாய் பூலே நூலகம் குறிப்பிடத்தக்க ஒன்று. சாவித்ரிபாய் 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகானில் பிறந்தார். 9 வயதில் ஜோதிபா பூலே என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகும...

ப்ளூ காலர் வேலை & ஒயிட் காலர் வேலை வித்தியாசம் என்ன?

ப்ளூ காலர் வேலை & ஒயிட் காலர் வேலை வித்தியாசம் என்ன? தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலைகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறார்கள். காலர் வண்ணங்களின் அடிப்படையில் தொழிலாளர்களை 2 பிரிவாக அதாவது ப்ளூ காலர் தொழிலாளர்கள் மற்றும் ஒயிட் காலர் தொழிலாளர்கள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறார்கள். உதாரணமாக: ப்ளூ காலர் தொழிலாளர்கள் என்பவர்கள் பொதுவாக உடல் உழைப்பைச் செய்கிறவர்கள் மணி கணக்கில் அல்லது துண்டு வேலை அடிப்படையில் ஊதியம் பெறுகிறவர்கள். அதேபோல ஒயிட் காலர் தொழிலாளர்கள் என்பவர்கள் அலுவலக அமைப்புகளில் எழுத்தர், நிர்வாகி அல்லது நிர்வாகப் பொறுப்புகளில் காணப்படுகிறவர்கள். இவர்கள் பொதுவாக மாதச் சம்பளம் பெறுகிறவர்கள். இரண்டிற்கும் இடையே உள்ள மற்ற முக்கிய வேறுபாடுகள், வேறுபட்ட கல்விப் பின்னணி மற்றும் சமூக பிரிவுகள் ஆகியவை அடங்கும். இவை 100% உண்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ப்ளூ காலர் தொழிலாளி என்பது கடின உழைப்பில் ஈடுபடும் நபர்களைக் குறிக்கிறது, பொதுவாக விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், சுரங்கம் மற்றும் பராமரிப்புத் துறைகள். இவர்களில் பெரும்பாலோர் தொன்றுதொட்டு அவர்கள் வேலை செய்...

Social Democratic Party of India -SDPIயைப் பற்றி..

SDPI-Social Democratic Party of India என்பது முஸ்லீம்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களின் முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட கட்சியாகும். அனைத்து குடிமக்களிடையேயும் அதிகாரத்தை நியாயமாகப் பகிர்வதே இதன் நோக்கமாகும். SDPI நமது அன்புக்குரிய தேசத்தின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நமது நாட்டில் நவ-காலனித்துவ மற்றும் நவ-தாராளவாத ஊடுருவல்களை எதிர்த்துப் போராடுவதற்காக கட்சி இங்கு உள்ளது. SDPI இன் முக்கியத்துவத்தை இவ்வாறு கூறலாம்; புதிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான விருப்பமும் சக்தியும் தங்களிடம் இருப்பதை உணர்ந்த மக்கள் குழு இது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும், அதிகாரப் பகிர்வின் மூலமும் மட்டுமே சமூக மற்றும் பொருளாதார நீதியை அடைய முடியும் என்பதை SDPI கட்சியினர் நன்கு அறிவார்கள். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது மற்றும் 21 ஜூன் 2009 அன்று புது தில்லியில் அறிவிக்கப்பட்டது. இது 13 ஏப்ரல் 2010 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. SDPI தொடங்கப்பட்ட உடனேயே...